சொல்லமுடியா ஓர் உணர்வுக்குள்
சிக்கித் தவிக்கிறேன்
இன்பத்திற்கு அது இணையில்லை
‘வலி’ மட்டுமே என்று பெயரிடவிருப்பமில்லை
உணர்ந்து பாருங்கள்
என்றுரைக்கமட்டேன்,
வெட்டவெளியில் உருவமில்லா
கருநிற இருளாய்
ஒவ்வொரு இரவும் என்னை
ஆட்கொள்(ல்)கிறது ...
ரத்தமும் சதையுமாய் மட்டுமே
நான் படைக்கப்பட்டிருக்கிறேன்
எதைத் தேடியே என் பயணம்?
ஒலிக்க முடியா நேரத்தில்
ஆயிரம் வயலின்களின் ஒட்டுமொத்த
இசையும் நரம்பறுத்த
நொடியில் என்னுடன்
படுக்கையைப்
பகிர்ந்துவிடுகிறது
அந்த உணர்வு...
“அது” என உணர்வுக்குப்
பெயரிட்டு
நாளையேனும்
நான் நானாய் வாழ்வேனென
ஒவ்வொரு விடியலிலும்
என்னை நானே பிரசவிக்கிறேன் !!!!
நன்றி : http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3556
Tuesday, October 26, 2010
Friday, September 10, 2010
சாத்தான் படலம்
அழுது நனைத்த
தலையணையில்
உமிழ்ந்து படர்கிறது
இரக்கமின்மை
பிரிவு குறித்த
சேதி சொல்லி
எக்களிக்கும், தெறித்து பிரிந்த
மின்னல் கீற்றுகள்
இருவழிப் பாதையில்
நடுக்கோட்டின் வழியே
தனியே நகரும்
மனம்
ஆடி களிக்க
வார்த்தை விளையாட்டு உனக்கு,
அலரி அழ 'ஆ, ஊ ,ஓ..' போதுமே
எனக்கு
எச்சமிடம் ஓலத்தின்
நாயகனாய் போயிருந்த
தனிமை ,
காதல் தொலைத்து
முக்கி முனகி, மீண்டு எழ
அனைவருக்கும் தேவதையாகி
போன தருணத்தில் எனக்கு நான்
சாத்தனாகி போயிருந்தேன் !
அன்றொரு மழை நாள் II
செல்லச் சண்டையின்
சிணுங்கள் கோபங்கள்
சுழித்துப் போன உதட்டில்
விழுந்து போன முதல்
மழைத்துளி
சிணுங்கள் கோபங்கள்
சுழித்துப் போன உதட்டில்
விழுந்து போன முதல்
மழைத்துளி
அழிந்து போன
ஆணவக் கூறுகள்
அசைத்துப் போனது
ஆசையின் வேர்களை
"ச்சீய்... போடா .."
என்ற வார்த்தையினூடே
ஈரமாகி போயிருந்தன
சண்டையிட்ட
உதடுகள்!
ஆணவக் கூறுகள்
அசைத்துப் போனது
ஆசையின் வேர்களை
"ச்சீய்... போடா .."
என்ற வார்த்தையினூடே
ஈரமாகி போயிருந்தன
சண்டையிட்ட
உதடுகள்!
அன்றொரு மழை நாள் I
சன்னலோர கம்பிகளின்
மழைத் துளி வழியே
மழைத் துளி வழியே
பயணம்
தேனீர் கோப்பையும்
தீராத தாகமுமாய்
தனித்து விடப்பட்டு
நினைவுகளை
அள்ளி பருகிக்கொள்கிறேன்
தீராத தாகமுமாய்
தனித்து விடப்பட்டு
நினைவுகளை
அள்ளி பருகிக்கொள்கிறேன்
துளிர்த்துக் கிளம்பும்
மண்வாசனையோடு - இதயம்
வெடித்துக்கிளம்பும்
என் விதிகளுக்கு அடங்காத
எண்ணங்கள்
மண்வாசனையோடு - இதயம்
வெடித்துக்கிளம்பும்
என் விதிகளுக்கு அடங்காத
எண்ணங்கள்
கொட்டிதீர்க்கும் மழையினூடே
உலர்ந்த உள்ளமுமாய்
ரகசியமாய் என் கண்ணீரும்
உலவி போகும் உணர்வுகளற்ற
உதட்டு புன்னகை
முழுவதையும் கரைக்க
மழையும் முயற்சிகிறதோ?
நன்றி :http://youthful.vikatan.com/youth/Nyouth/aarthipoem310710.asp
உலர்ந்த உள்ளமுமாய்
ரகசியமாய் என் கண்ணீரும்
உலவி போகும் உணர்வுகளற்ற
உதட்டு புன்னகை
முழுவதையும் கரைக்க
மழையும் முயற்சிகிறதோ?
நன்றி :http://youthful.vikatan.com/youth/Nyouth/aarthipoem310710.asp
Thursday, July 15, 2010
இருள் உமிழும் தனிமை
இருட்டறையின்
நிசப்த கொலைக்கு
சாட்சியாய் வெளியேறுகிறது
என் தலையணை நனைக்கும்
கண்ணீர்த் துளி!!
நிசப்த கொலைக்கு
சாட்சியாய் வெளியேறுகிறது
என் தலையணை நனைக்கும்
கண்ணீர்த் துளி!!
***
நித்திரையில்லா
நடுநிசியில்
வார்த்தை பிச்சைக்காரி
என்னிடம்,
எச்சில் உமிழ்கிறது
என் எதிர்ப்பார்ப்புகளை
இழுத்துச் சுத்தும்
அறை காத்தாடி!!
நித்திரையில்லா
நடுநிசியில்
வார்த்தை பிச்சைக்காரி
என்னிடம்,
எச்சில் உமிழ்கிறது
என் எதிர்ப்பார்ப்புகளை
இழுத்துச் சுத்தும்
அறை காத்தாடி!!
***
இருளில் கழித்த
தனிமைக்கு
எனை விற்ற விலையின்னும்
தெரியவில்லை!!
தனிமையை கையகப்படுத்திட
என் பேனாவிற்கு
வெற்றுத்தாள் துணைவர
அமையவில்லை!!!
விற்றதற்காகவும் தொலைத்தற்காகவும்
அழுது தீர்க்கிறோம்
நானும் என் பேனாவும்!!
***
என் அறையின்
ஒவ்வொரு மூலையின்
சமிக்ஞையையும் சுட்டிக்காட்டுகின்றன
ஒவ்வொரு இரவின்
தனிமை மரணத்தையும்
ஒவ்வொரு பொழுதின்
தனிமை விடியலையும்!!
இருளில் கழித்த
தனிமைக்கு
எனை விற்ற விலையின்னும்
தெரியவில்லை!!
தனிமையை கையகப்படுத்திட
என் பேனாவிற்கு
வெற்றுத்தாள் துணைவர
அமையவில்லை!!!
விற்றதற்காகவும் தொலைத்தற்காகவும்
அழுது தீர்க்கிறோம்
நானும் என் பேனாவும்!!
***
என் அறையின்
ஒவ்வொரு மூலையின்
சமிக்ஞையையும் சுட்டிக்காட்டுகின்றன
ஒவ்வொரு இரவின்
தனிமை மரணத்தையும்
ஒவ்வொரு பொழுதின்
தனிமை விடியலையும்!!
***
ஒரு மழை நாளின்
சன்னலோர துளியோடு
இசைந்து போகவும்
அசை போட நினைவுமாய்
பயணத்தை சுமக்க
எத்தனிக்கிறேன்!!
ஒரு மழை நாளின்
சன்னலோர துளியோடு
இசைந்து போகவும்
அசை போட நினைவுமாய்
பயணத்தை சுமக்க
எத்தனிக்கிறேன்!!
Friday, July 9, 2010
படிக்கட்டு
அந்தப் படிக்கட்டின்
ஒவ்வொரு வளைவுகளும்
உனக்காக காத்திருந்து
என் விரல் உரசிய
கைப்பிடியை எள்ளி
நகையாடுகின்றன!
ஒவ்வொரு வளைவுகளும்
உனக்காக காத்திருந்து
என் விரல் உரசிய
கைப்பிடியை எள்ளி
நகையாடுகின்றன!
முதல் துளி தொடங்கி
சீற்றம் வற்றிய
கடைசித் துளி வரையிலான
அமைதியையும் இரைச்சலையும்
பார்த்தாகிவிட்டது !
கடந்து போகிறேன்
ஒவ்வொரு படியும்
ஒவ்வொரு நினைவாய்
திரும்பி பார்க்கையில்
தொற்றிக் கொள்கிறது
ஓர் அசூயை !
கேட்டு முடித்த வார்த்தைகளும்
சொல்ல துடித்த இதயமும்
வந்து விழுகிறது
கண்ணீராய்!!
*
நன்றி : http://youthful.vikatan.com/youth/Nyouth/aarthypoem070710.asp
Thursday, July 1, 2010
கேள்வி நேரம்
இன்னிக்கு எனக்கு நிறைய எழுதனும்னு தோணுது. காரணமும், காரணகர்தாவையும் தான் தேடிக்கிட்டு இருக்கேன்.
வாழ்க்கைல நம்மள கடந்து போகுற சில மனிதர்களுக்கும், அவர்கள் கடக்கும் அந்த தருணங்களுக்கும் நாம் பேர் வைக்க முடியாது. ஆனா அந்த சில மனிதர்களும் , அந்த தருணங்களுக்கும் நிறைய தாக்கம் உண்டு , அது நமக்குள்ள எப்போவுமே மறைமுகமாவோ, நிதர்சனமாவோ நிச்சயம் இருக்கும்.
அந்த எண்ணங்கள் எப்பவுமே இரண்டு விதமா நமக்குள்ள வேலை பார்க்கும். ஒன்னு நம்ம மனச கசக்கி நம்மள இருக்குற நிலைலேந்து திருப்பி போட்டுடும். நல்ல தானேயா சிரிச்சிட்டு இருந்தான் என்ன ஆச்சு திடீர்னு அப்படின்னு மத்தவங்களுக்கு தோணும்.
ரெண்டாவது நெனச்சாலே அப்படியே ஒரு வித இனம் புரியாத பூரிப்பு தோணும். நம்மள அறியாம ஒஉர் புன்னகை உதட்டுல உலவும். ஆனா இதுவும் நம்மள இருக்குற நிலைலேந்து திருப்பி போட்டுடும்.
ஆனா அது வேற இது வேற.
இந்த ரெண்டு விஷயத்துலயும் சம்பந்த பட்ட மனிதர்கள் , அவர்கள் கூட இருந்த நேரங்கள், இல்ல சில பல நினைவுகள், இல்ல அவர்கள் சம்பந்தப்பட்ட செய்கைகள் மேற்கூறிய இரண்டு நிலைமைல ஒன்னுக்குள்ள உங்கள கூட்டிட்டு போய்டும்.
இப்போ என் கேள்வி என்னன்னா?
இந்த மாதிரி ஒரு சூழல் உங்களுக்கு வந்த அந்த நிலைமையில் அதை எப்படி எடுத்துக்குவீங்க ? என்ன ஆச்சு உனக்கு அப்படின்னு என்ன கேள்வி கேட்க வேண்டாம்!! இது ஒரு பொதுவான நிலைமை நாம் அன்றாட வாழ்க்கை வண்டியின் ஒரு பயணம் தான். நிச்சயமா எல்லாரும் இது போல பயணம் செஞ்சி இருப்பீங்க.
பொதுவான விஷயமா இது கையாண்டா நிறைய விளக்கம் கிடைக்கும்னு நம்புறேன்... ஆவலுடன் !!!
நிறைய எண்ண மீன்களை தூண்டில் போட்டு பிடிக்க விரும்பும் என் விளையாட்டுக்கு தீனி போடும் முயற்சி இது !!!
மொக்க போஸ்டுன்னு திரும்பி போயிராதீங்க !!! ஒரு பதில சொல்லிபுட்டு போங்கப்பு !!!!
Subscribe to:
Posts (Atom)



