Showing posts with label வேண்டும். Show all posts
Showing posts with label வேண்டும். Show all posts

Thursday, July 1, 2010

கேள்வி நேரம்

இன்னிக்கு எனக்கு நிறைய  எழுதனும்னு தோணுது. காரணமும், காரணகர்தாவையும்  தான் தேடிக்கிட்டு இருக்கேன்.
வாழ்க்கைல நம்மள கடந்து போகுற சில மனிதர்களுக்கும், அவர்கள் கடக்கும் அந்த தருணங்களுக்கும் நாம் பேர் வைக்க முடியாது. ஆனா அந்த சில மனிதர்களும் , அந்த தருணங்களுக்கும் நிறைய தாக்கம் உண்டு , அது  நமக்குள்ள எப்போவுமே மறைமுகமாவோ, நிதர்சனமாவோ நிச்சயம் இருக்கும். 

அந்த எண்ணங்கள்  எப்பவுமே இரண்டு விதமா நமக்குள்ள வேலை பார்க்கும். ஒன்னு நம்ம மனச கசக்கி நம்மள இருக்குற நிலைலேந்து  திருப்பி போட்டுடும். நல்ல தானேயா சிரிச்சிட்டு இருந்தான் என்ன ஆச்சு திடீர்னு அப்படின்னு மத்தவங்களுக்கு  தோணும்.

ரெண்டாவது நெனச்சாலே அப்படியே ஒரு வித இனம் புரியாத பூரிப்பு தோணும். நம்மள அறியாம  ஒஉர் புன்னகை உதட்டுல  உலவும். ஆனா இதுவும் நம்மள இருக்குற நிலைலேந்து திருப்பி போட்டுடும்.

ஆனா அது வேற இது வேற.

இந்த ரெண்டு விஷயத்துலயும் சம்பந்த பட்ட மனிதர்கள் , அவர்கள் கூட இருந்த நேரங்கள், இல்ல சில பல நினைவுகள், இல்ல அவர்கள் சம்பந்தப்பட்ட செய்கைகள் மேற்கூறிய இரண்டு நிலைமைல  ஒன்னுக்குள்ள உங்கள கூட்டிட்டு போய்டும்.

இப்போ என் கேள்வி என்னன்னா? 
இந்த மாதிரி ஒரு சூழல்  உங்களுக்கு வந்த அந்த நிலைமையில்  அதை எப்படி எடுத்துக்குவீங்க ? என்ன ஆச்சு உனக்கு அப்படின்னு  என்ன கேள்வி கேட்க வேண்டாம்!! இது ஒரு பொதுவான நிலைமை நாம் அன்றாட வாழ்க்கை வண்டியின் ஒரு பயணம் தான். நிச்சயமா எல்லாரும் இது போல பயணம் செஞ்சி இருப்பீங்க.
பொதுவான விஷயமா இது கையாண்டா நிறைய விளக்கம்  கிடைக்கும்னு நம்புறேன்... ஆவலுடன் !!!

நிறைய எண்ண மீன்களை தூண்டில் போட்டு பிடிக்க விரும்பும் என் விளையாட்டுக்கு தீனி போடும் முயற்சி இது !!!

மொக்க போஸ்டுன்னு திரும்பி போயிராதீங்க  !!! ஒரு பதில சொல்லிபுட்டு போங்கப்பு !!!!

Tuesday, July 21, 2009

வேண்டும் !!!

இனிய காலையில் என்னை கண்டதும்
புன்னகைக்கும் அந்த முகம் வேண்டும் !

எப்போது கண்டாலும் நலமா என்று
விசாரிக்கும் அந்த விழிகள் வேண்டும் !

என் மகிழ்சியில் என்னை விட அதிகமாய்
துள்ளி குத்திக்கும் ஆன்மா வேண்டும் !

நான் விம்மி அழும் போதுமுகம்
புதைக்க அந்த மார்பு வேண்டும் !

நான் துவண்டு விழும் போது என்
தலை கோத ஐ விரல்கள் வேண்டும் !

இவை அத்தனையும் வேண்டும் ,
ஆம் ஒரு ஆணாக !!!

காதல் என்றல்ல , நட்பாக !!
அதற்கு முன்,இதை நட்பாக புரிந்து கொள்ளும்
உலகம் வேண்டும் ! வேண்டும் !!