Monday, July 20, 2009

மழை காதல்



இவை கவிதைகள் அல்ல , எனது கிறுக்கல்கள் மட்டுமே !!



அடித்து ஓய்ந்த
மழையின் பின்னே,
இனித்து சினுங்கும்
சிறு தூரலாய் எனக்கு,
உனது மௌன மொழிகள்!!

****************************************

இரவு நேரம்,
நெடுந்தூர நடை,
கரம் கோர்த்து நாம்,
கள்ளம், கபடமில்லா,
ஒவ்வொரு உரசலிலும்,
உன்னுள் நனைந்தபடி நான்,
அங்கே, நின்று போனது மழை !!

****************************************

"போதும் நனைந்தது.." என்னும்
உன் அதட்டல் அன்பிற்கு
என்ன தெரியும், நான்
உச்சந்தலை முதல் , உள்ளங்கால் வரை,
உன் காதல் மழையில்
நனைந்து கொண்டே தான்
இருக்கிறேன் என்று !!

******************************************

பி கு : நேத்து பெய்த மழைல கொஞ்ச நேரம் நனைஞ்சிட்டு இருந்தேன்...அதனால வந்த..( ஹச்ச்ச்ச்ச்ச்ச் .. )வினை இது..அட தும்மல் இல்லீங்க..இந்த கிறுக்கல்கள் ....

No comments:

Post a Comment