Wednesday, February 16, 2011

பனித்துளி


இதயம் விரித்து 
சிறகடித்து பறக்க 
ஆசை தேவைப்படுவதில்லை
ஓர் அன்பு மட்டுமே அவசியப்படுகிறது..

மேக நிழலை 
கிழித்து துவங்கும் 
முதல் துளியாய்
உயிர் தொட துவங்கிவிடுகிறது 
அதற்கான ஓர் எதிர்பார்ப்பு ..

சுவாசம் மட்டும் 
தொடும் தூரத்தில் 
பார்வை உரையாடலாய்
ஓர் இனிமை கொலைக்கு 
இடைவெளி விட்டு நகரும் 
சின்ன சிணுங்கல்கள் , 
அன்பு நிரப்பிய 
ஓர் இதயத்திற்காக ..

அங்கே 
மழை நனைக்க மறுக்கும் என்னை 
ஓர் பனித்துளி முழுதாய்
நனைத்துவிட்டு போய்விடும் ..