Friday, September 10, 2010

சாத்தான் படலம்

அழுது நனைத்த
தலையணையில்
உமிழ்ந்து படர்கிறது
இரக்கமின்மை
பிரிவு குறித்த
சேதி சொல்லி
எக்களிக்கும், தெறித்து பிரிந்த
மின்னல் கீற்றுகள்
இருவழிப் பாதையில்
நடுக்கோட்டின் வழியே
தனியே நகரும்
மனம்
ஆடி களிக்க
வார்த்தை விளையாட்டு உனக்கு,
அலரி அழ 'ஆ, ஊ ,ஓ..' போதுமே
எனக்கு
எச்சமிடம் ஓலத்தின்
நாயகனாய் போயிருந்த
தனிமை ,
காதல் தொலைத்து
முக்கி முனகி, மீண்டு எழ
அனைவருக்கும் தேவதையாகி
போன தருணத்தில் எனக்கு நான்
சாத்தனாகி போயிருந்தேன் !




அன்றொரு மழை நாள் II

செல்லச் சண்டையின்
சிணுங்கள் கோபங்கள்
சுழித்துப் போன உதட்டில்
விழுந்து போன முதல்
மழைத்துளி
அழிந்து போன
ஆணவக் கூறுகள்
அசைத்துப் போனது
ஆசையின் வேர்களை
"ச்சீய்... போடா .."
என்ற வார்த்தையினூடே
ஈரமாகி போயிருந்தன
சண்டையிட்ட
உதடுகள்!

அன்றொரு மழை நாள் I

சன்னலோர கம்பிகளின்
மழைத் துளி வழியே 
பயணம்
தேனீர் கோப்பையும்
தீராத தாகமுமாய்
தனித்து விடப்பட்டு
நினைவுகளை
அள்ளி பருகிக்கொள்கிறேன்
துளிர்த்துக் கிளம்பும்
மண்வாசனையோடு - இதயம்
வெடித்துக்கிளம்பும்
என் விதிகளுக்கு அடங்காத
எண்ணங்கள்
கொட்டிதீர்க்கும் மழையினூடே
உலர்ந்த உள்ளமுமாய்
ரகசியமாய் என் கண்ணீரும்
உலவி போகும் உணர்வுகளற்ற
உதட்டு புன்னகை
முழுவதையும் கரைக்க
மழையும் முயற்சிகிறதோ?


நன்றி :http://youthful.vikatan.com/youth/Nyouth/aarthipoem310710.asp