Friday, September 10, 2010

அன்றொரு மழை நாள் I

சன்னலோர கம்பிகளின்
மழைத் துளி வழியே 
பயணம்
தேனீர் கோப்பையும்
தீராத தாகமுமாய்
தனித்து விடப்பட்டு
நினைவுகளை
அள்ளி பருகிக்கொள்கிறேன்
துளிர்த்துக் கிளம்பும்
மண்வாசனையோடு - இதயம்
வெடித்துக்கிளம்பும்
என் விதிகளுக்கு அடங்காத
எண்ணங்கள்
கொட்டிதீர்க்கும் மழையினூடே
உலர்ந்த உள்ளமுமாய்
ரகசியமாய் என் கண்ணீரும்
உலவி போகும் உணர்வுகளற்ற
உதட்டு புன்னகை
முழுவதையும் கரைக்க
மழையும் முயற்சிகிறதோ?


நன்றி :http://youthful.vikatan.com/youth/Nyouth/aarthipoem310710.asp

No comments:

Post a Comment