Tuesday, June 15, 2010

மாறுதலுக்கு உட்பட்டவை அல்ல !!


இரவில் ஒரு பகலையும்,
பகலில் ஒரு இரவையும் ,
நினைவுகளில் சில நிஜத்தையும்
சில நிஜங்களில் பல நினைவுகளையும்  
உரசிய மனம் சொன்னது,இவை
மாறுதலுக்கு உட்பட்டவை அல்ல என்று!

Thursday, June 10, 2010

நினைவுகளும் அதன் பதிவுகளும்

உன் பாதச் சுவடுகள் பதிந்திருக்கும்
ஒவ்வொரு கடற்கரை மணலிலும்
கலந்திருக்கிறது உனக்கான
என் நினைவுகள் !

அதிகமாய் அழுத்தி விடாதே
ஆழமாய் இறங்குகிறது மனம்
உன் பாத சுவடில் தொலைத்துவிட்ட
என் உலகத்தை தேடி !!

உனக்கான என் காதலை
வர்ணிக்க விழைகையில் , அறிந்தேன்
அந்த சில நிகழ்வுகள்
சந்தர்ப்பவசமானவை , ஆனால்
அதன் பதிவுகள் என்றும்
நிரந்தரமானவை !!