Thursday, June 10, 2010

நினைவுகளும் அதன் பதிவுகளும்

உன் பாதச் சுவடுகள் பதிந்திருக்கும்
ஒவ்வொரு கடற்கரை மணலிலும்
கலந்திருக்கிறது உனக்கான
என் நினைவுகள் !

அதிகமாய் அழுத்தி விடாதே
ஆழமாய் இறங்குகிறது மனம்
உன் பாத சுவடில் தொலைத்துவிட்ட
என் உலகத்தை தேடி !!

உனக்கான என் காதலை
வர்ணிக்க விழைகையில் , அறிந்தேன்
அந்த சில நிகழ்வுகள்
சந்தர்ப்பவசமானவை , ஆனால்
அதன் பதிவுகள் என்றும்
நிரந்தரமானவை !!

No comments:

Post a Comment