Tuesday, July 28, 2009

வார்த்தை இல்லா கவிதை !!


வாசிக்க நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்
மறந்து போகிறேன்
வார்த்தை இல்லா
கவிதை, எனக்கு
நீ என்று !!


~~~~~~~~~~~~~~~~~~~~~

"கைய பிடி" என்று அதட்டல் போட்டு ,
என் கரம் பற்றி, பிஞ்சுக் குழந்தை,
பாதுகாக்கும் மயிலிறகாய், கூட்ட
நெரிசலில் எனை அழைத்து வரும்
உனை வாசிக்க முயற்சிக்கையில்,
காதல் மேல் காதல் பிறக்கிறது !!

Monday, July 27, 2009

நினைவுகள் கொல்லும் தனிமை !!



கூர்காவின் விசில் சத்தம், இரவில்
கேட்டு நான் அலறுவதற்குள்,எனக்கு
முன்னே எழுந்து "ஒண்ணுமில்லடா.." என்று
தடவி கொடுக்கும் என் அம்மாவின் ,
நினைவுகளால் கொல்லப்பட்டும் ,
என் தனிமை !!
******************************************************

"ஐயோ பாவம், எளச்சி போய்ட்டா" என்று
நான் உறங்கையில், தலை கோதியும்,
"எனக்கென்னயா, பொண்ணு ராஜா மாதிரி பாதுக்குறா"
என்று ஊரில் பெருமை பேசும், என் அப்பாவின்
நினைவுகளால் கொல்லப்பட்டும் ,
என் தனிமை !!
********************************************************
"மச்சான் எங்கக்கா வராங்க, திங்கட்கிழமை
காலேஜ்ல பார்க்கலாம்டா " என்று எனக்காக
புன்னகைத்து, இரவு எத்துனை மணி ஆயினும்,
என்னை அழைத்து வர வந்து சேரும்,
என் தம்பியின் நினைவுகளால் கொல்லப்பட்டும்
என் தனிமை !!
******************************************************

எனக்கென ஒரு அறை,
ஒரு தொலைகாட்சி பெட்டி,
ஒரு தொலைபேசி,
அதே போல் ,ஒரு தனிமை !!
*****************************************************
நினைவுகளை பின்னே தள்ளி,
திரும்பி வராத இனிய நாட்களை எண்ணி,
முடங்கி போகிறேன், யாருமில்லா,
வெட்டவெளியில் மூச்சு திணறலாய்,
என் தனிமையோடு !!

Tuesday, July 21, 2009

வேண்டும் !!!

இனிய காலையில் என்னை கண்டதும்
புன்னகைக்கும் அந்த முகம் வேண்டும் !

எப்போது கண்டாலும் நலமா என்று
விசாரிக்கும் அந்த விழிகள் வேண்டும் !

என் மகிழ்சியில் என்னை விட அதிகமாய்
துள்ளி குத்திக்கும் ஆன்மா வேண்டும் !

நான் விம்மி அழும் போதுமுகம்
புதைக்க அந்த மார்பு வேண்டும் !

நான் துவண்டு விழும் போது என்
தலை கோத ஐ விரல்கள் வேண்டும் !

இவை அத்தனையும் வேண்டும் ,
ஆம் ஒரு ஆணாக !!!

காதல் என்றல்ல , நட்பாக !!
அதற்கு முன்,இதை நட்பாக புரிந்து கொள்ளும்
உலகம் வேண்டும் ! வேண்டும் !!

உனது காதலில் விழுந்தேன் !!

எழுத நினைக்கையில்
சிறகடித்து பறக்கும்,
உனக்கான வார்த்தைகள்
எழுத துவங்கையில்,
சிறகொடிந்து போவதேன் ?


பல முறை உன்னை சந்தித்தும்,
என் மௌனம் களைய முடியாமல்,
போன போது புரிந்தது,
போர் புரியும் இந்த பூவை,
உன் புன்னைகையால் கொல்கிறாய் என்று !!


உன்னிடம் நேரில் பேசாமல்,
நான் வளர்க்கும் இந்த காதலும்,
எனக்கு சுகம் தான்!
உன் ஒரு ஜோடி கண் பார்த்து,
சொல்ல முடியாத என் காதலை,
இந்த கடிதம் சொல்கிறதே என்று , இருப்பினும்
"அன்புள்ள ...." இந்த ஒரே வார்த்தையில்,
சுருங்கி போகிறதே என் கடிதம்
உனது காதலில் விழுந்தேன் !!!!

Monday, July 20, 2009

ஊர் போய் வந்த கதை !!

நைட்டு ஒரு11 மணி இருக்கும், எங்கப்பா நிதானமா என்ன தட்டி எழுப்பினாரு, எந்திரிடா கோயில் போகணும் கிளம்பலாம்னாறு,
என்னது இப்போவா? ( ஏது பலி , கிலி குடுக்க போரங்களா? இந்த நேரம் கோயில்னுராங்க?, ஊருக்குள்ளயும் சின்ன புள்ளைங்கள பலி குடுத்தா நெனச்சது நடக்கும்னு வேற சொல்லுவாங்களே, சே சே நம்ம அப்பா , அப்படியெல்லாம் செய்யமாட்டாரு !!!)


அப்போ கூட பேகெல்லாம் பேக் பண்ணிவெச்சிஇருந்த எங்க அம்மாவ அப்படியே கைதாங்கலா பிடிச்சிகிட்டு, மாட்டுதாவணி போய் திருச்சி வண்டி ஏறினோம்... அப்போவே மணி நைட்டு 12 இருக்கும்..

அந்த பஸ்காரரருக்கு என்ன அவசரமோ, 3 மணிக்கெல்லாம் திருச்சி கூட்டிட்டு போய்ட்டாரு....

யப்பா, ஏன்பா இப்படி நடுராத்திரி 3 மணிக்கு படுத்துறீங்க?
எனக்கு ஒரே தூக்கம் தூக்கமா வருது.. இப்போ எங்க தான் போறோம் நாம??
ஒரு வேண்டுதல்டா !! நெஜமா சொல்றேங்க சட்டுன்னு தூக்கம் போய்ரிச்சு எனக்கு, ஏது கூட்டிட்டு போய் வேண்டுதல்ன்னு, வாய்ல அலகு ஏதும் குத்திடுவாங்கலோன்னு...
அந்த ப்ராபர்டி மட்டும் இல்லேனா நமுக்கு வேலையே இல்லையே..நம்ம முதலீடே அது தானே.. எதுனாலும் பஸ் ஸ்டாண்ட்லையே பேசி தீத்துக்கனும்னு..முடிவு பண்ணேன்...


நான் :: யப்பா... ஸ்டாப்.. இப்போவே என்னகு மேகி நூடுல்ஸ் வேணும் ..
அப்பா :: என்னது, இப்போவா, சாமி பார்துதுட்டு வரும்போது வாங்கி தரேண்டா ....(ஓகே..நல்ல மூட்ல இருகார் ..ஸ்டார்ட் பண்ணு ஆர்த்தி ...)
நான் :: எல்லாம் ஓகே, என்ன திடீர் பிளான்? என்னகு இப்பவே தெரியனும்..
அப்பா :: இல்லடா உன்மேல பலபேருக்கு கண்ணு, திருஷ்டி ஜாஸ்தி, கோயில் போய் வேண்டிண்டு வரணும்னு சொல்லி இருக்கா அதான்டா.. உன் வளமான எதிர்காலத்துக்கு நல்லதுடா அது..
நான் :: யப்பா, அது மேனுபாக்ச்ரிங் டிபெக்ட், இடைல பிக்ஸ் பண்ண முடியாது.. பெண்டிங் லேடேன்டுன்னு க்ளோஸ் பண்ணுங்கோப்பா....
அப்பா ::!@#$%^&*()_+)*&^%$#@#$$%^&*((__*#$##$$ (ஒழுங்கா இருந்தவர நாம தான் உசுப்பி விட்டுடோமோ ?...)
சமயபுரம் போக பஸ்ல ஏறினோம் .. எங்கம்மா பஸ்ல முன்பக்க வழில ஏறினாங்க, நானும் எங்கப்பாவும் பின்பக்க வழியா ஏறினோம்...
போலாம் ரைட் ... ( அட... கேலபுங்கப்பா .....)


கண்ணா தொறந்து பார்த்தா, டிரைவர் சீட் பின்னாடி நிக்கறேன் நான், பின்னாடி பக்கமா ஏறின மாதிரி இருந்துச்சு... எப்படி , இப்படி ????
டிரைவர் பன்னாடி ரெண்டு சீட் தள்ளி இருந்த சீட் கிட்ட நின்னுட்டு இருந்தேன்,
சன்னல் சீத்ல ஒரு அக்கா, பக்கத்துல அவங்க பாடி கார்டு ( அட..அவங்க புருஷன்...)
எல்லாருமே தூக்க கலகத்துல இருந்தாக ( டிரைவரும் தான்...)
டிரைவர் ஓட்டுற வேகத்துல எங்க அந்த அண்ணன் மடில உக்காந்துருவேனோனு பயந்துட்டே நின்னுட்டு இருந்தேன்.. சும்மா சொல்ல கூடாது.. ( சரி காசு குடுத்துட்டு , சொல்லுங்கன்னு யாராச்சும் மொக்க போட்டீங்க .. சூலாதுயதால சொரிகிடுவேன்...) அந்த அக்கா, அந்த அண்ணன கண்ணாலயே மிரட்டிட்டு இருந்தாங்க.. அடடா வாஸ்த்துவே சரியில்லயே, டிரைவர் பின்னாடி போய் நின்றலாம், நல்லதுன்னு நகந்தா...
"யோவ், நாமாட்டுக்கும் விசில் அடிச்சிட்டே இருக்கேன் வண்டிய நிறுத்தாம போற..நான் பிரேக் அடிச்சே நிக்கல, நீ விசில் அடிச்சா நின்றுமா.. வண்டிய நிறுத்தனும்னா அட்வான்ஸா சொல்லுயா !!!"
ஏது போகுற, போக்க பார்த்தா, அடுத்த ப்ரேக்ல நான், வடிவேலு மாதிரி கண்ணாடிய ஒடச்சி,
" யாருக்குநட்டம், உன்னாக, எனக்காகுன்னு கேட்கபோறேன்னு நெனச்சேன்..."
ஆனா சும்மா சொல்ல கூடாது ...( யார அது..மறுபடியும் காசுங்க்றது..எட்ரா சுலாயுதத்த ....) சூப்பரா கூட்டிட்டு வந்து விட்டாருங்க..குடுத்த காசுக்கு அதிகமாவே ஓட்டினாரு!!
அம்மா தாயி,
உலகத்துல மக்க, மனுசங்க நல்லபடியா இருக்கனும்..
என் டாமேஜர்க்கு நல்ல ப்ராஜெக்ட் கிடைக்கனும்.. ஆனா அத விட நல்ல ப்ராஜெக்ட் எனக்கு கிடைக்கனும்.. ..
மழை, தண்ணி நல்லபடியா பெய்யணும்,
என் மேனேஜர் முன்னாடி நான் ஆன்ஸைட் போகணும்...
கண்டபடி நடக்குற ஆக்சிடெண்ட கொஞ்ச நிறுத்து தாயி..
என் மேனேஜர் நோய், நொடி இல்லாம இருக்கனும், அப்போ தான் நான் கேட்குபோதெல்லாம் எனக்கு லீவ் கெடைக்கும்...
!@#$%
%^&*
)(*&^ (எல்லாமேவா சொல்வாங்க.. மத்ததெல்லாம் சென்சார்டு ..)
நல்லபடியா, சாமிய வேண்டிட்டு ,எல்லாத்தையும் முடிச்சிட்டு.. அங்க, அங்க நின்னு போடோவுக்கு போஸ் குடுத்துட்டு.. ஊரு வந்து சேர்ந்தாச்சு..
சரி....

மேகி தானே , வாங்கி கொடுத்துடாரு.. என்ன போல நல்லவல பெத்தவருங்க.. அவரு ரொம்பவே நல்ல நல்லவருங்க ..

மழை காதல்



இவை கவிதைகள் அல்ல , எனது கிறுக்கல்கள் மட்டுமே !!



அடித்து ஓய்ந்த
மழையின் பின்னே,
இனித்து சினுங்கும்
சிறு தூரலாய் எனக்கு,
உனது மௌன மொழிகள்!!

****************************************

இரவு நேரம்,
நெடுந்தூர நடை,
கரம் கோர்த்து நாம்,
கள்ளம், கபடமில்லா,
ஒவ்வொரு உரசலிலும்,
உன்னுள் நனைந்தபடி நான்,
அங்கே, நின்று போனது மழை !!

****************************************

"போதும் நனைந்தது.." என்னும்
உன் அதட்டல் அன்பிற்கு
என்ன தெரியும், நான்
உச்சந்தலை முதல் , உள்ளங்கால் வரை,
உன் காதல் மழையில்
நனைந்து கொண்டே தான்
இருக்கிறேன் என்று !!

******************************************

பி கு : நேத்து பெய்த மழைல கொஞ்ச நேரம் நனைஞ்சிட்டு இருந்தேன்...அதனால வந்த..( ஹச்ச்ச்ச்ச்ச்ச் .. )வினை இது..அட தும்மல் இல்லீங்க..இந்த கிறுக்கல்கள் ....