Friday, September 10, 2010

அன்றொரு மழை நாள் II

செல்லச் சண்டையின்
சிணுங்கள் கோபங்கள்
சுழித்துப் போன உதட்டில்
விழுந்து போன முதல்
மழைத்துளி
அழிந்து போன
ஆணவக் கூறுகள்
அசைத்துப் போனது
ஆசையின் வேர்களை
"ச்சீய்... போடா .."
என்ற வார்த்தையினூடே
ஈரமாகி போயிருந்தன
சண்டையிட்ட
உதடுகள்!

No comments:

Post a Comment