Friday, July 9, 2010

படிக்கட்டு

அந்தப் படிக்கட்டின்
ஒவ்வொரு வளைவுகளும் 
உனக்காக காத்திருந்து 
என் விரல் உரசிய 
கைப்பிடியை எள்ளி 
நகையாடுகின்றன!

மழையின் 
முதல் துளி தொடங்கி
சீற்றம் வற்றிய
கடைசித் துளி வரையிலான
அமைதியையும் இரைச்சலையும் 
பார்த்தாகிவிட்டது !

கடந்து போகிறேன்
ஒவ்வொரு படியும்
ஒவ்வொரு நினைவாய்
திரும்பி பார்க்கையில்
தொற்றிக் கொள்கிறது
ஓர் அசூயை !

கேட்டு முடித்த வார்த்தைகளும்
சொல்ல துடித்த இதயமும்
வந்து விழுகிறது 
கண்ணீராய்!!
*
நன்றி : http://youthful.vikatan.com/youth/Nyouth/aarthypoem070710.asp

No comments:

Post a Comment