Sunday, December 12, 2010

ஓர் மலர், ஓர் பீடித்துண்டு , ஓர் அறிவு



"சரோஜா weds சாமுவேல்"
மலர்களாலான எழுத்துக்களில் 
எந்த மலரில் 
தன் ஆசைகளை தைத்திருப்பான்
அவன் ?

******
சொருகிப்போயிருந்த கண்கள் 
குழி விழுந்த கன்னம் 
கறுத்து தடித்த தோல்
அழுக்கு ஆடை, உச்சிவெயிலின் 
நீர்கண்டிரா தார்ச்சாலையில் 
ஒரு பீடித்துண்டு 
அவனை குடித்துக்கொண்டிருந்தது...

******
மாலை தனிமை எழுது
என்றான் நண்பன் ,
ஒரு மழை நாள் நடந்ததை எழுது
என்றது மனம்,
புரிதலே இல்லை 
எழுதி ஒன்றும் ஆவதில்லை 
அறைந்து சொன்னது 
ஆறாவது அறிவு !!



டிஸ்கி : இவை என் கிறுக்கல்கள் மட்டுமே...

No comments:

Post a Comment