Thursday, August 20, 2009

உன்னை நான் அறிவேன் !!



பேசாத என் பெண்மையை
சித்திரமாய் முன் நிறுத்த
உன் இதழ் பிரியா ஓர்
புன்னகை போதுமே !!

***************************************


உன் ஒவ்வொரு இமைதட்டும்
உரசி பார்க்கும் உள்ள உணர்வுகளை
வார்த்தைகளிட்டு கூற இயலாமல்
உன்னை பார்த்தபடி நான்
என் விழிகள் பார்த்தபடி நீ !!

*****************************

நீ இல்லாத நேற்று
இன்றைய குழப்பம்
நாளைய பதில்கள்
யதார்த்தம், இதை
தான் காதலிக்கிறேன் !!

****************************

உன்னுடனான நேரத்தில்
என் உதடுகள் இமைக்க மறந்த
பொழுதில் உணர்ந்தேன், அங்கே
பேசிகொண்டிருப்பது உன்
விழிகள் என்று !!

********************************


பகலை தொடர்ந்த
இரவை தொடர்ந்து
விடியலும் வருமென
உனக்காய் காத்திருக்கிறேன்!

2 comments:

  1. My dear aarthy. i am very proud of you. All the best for your bright future.

    ReplyDelete